Thursday, January 21, 2016

அன்பை உடைத்தெறிந்த உலகத்தில் , உன்னிடம் மட்டும் எஞ்சியிருக்கும் என்று உணர்கிறேன் . அதனால் , உன்னை பின்தொடர ஏங்குகிறேன் .
பிறப்பது எவரால்  என்று நீ முன் அறியாவிட்டாலும் , இறப்பது எமனால் என்று நீ முன் அறிவாய் . பிறப்பின் பயனெல்லாம் பாவத்தின் வினையால் எனும்போது, நீ பிறந்தபின் தேடிக்கொள்ளும் பாவங்களுக்கு என்ன பயனடயப்போகிறாய் ?  இறைவன் உனக்கு உருகொடுக்கிறான் , எமன் உனது உருவெடுக்கிறான் . இப்பிறவியில் நீ மானிடன் என்றாலும் முற்பிறவியிலும் ,பிற்பிறவியிலும் உனது நிலை என்ன ? அறியாய் மானிடா ..!
அடைந்திருக்கும் வாழ்வை அற்புதமாக்கு ....அடுத்ததை ஆண்டவன் பார்த்துக்கொள்வார் .
என்றும் அன்புடன்
உமா மகேஸ்வரி .

Monday, January 18, 2016

இன்று மாலை 3 மணிக்கு நேரலையில் ....
உங்களை சந்திக்கிறேன் .....
தயாராகுங்கள் .

Wednesday, January 13, 2016

அரசு மற்றும் அலுவலக  ஊழியர்களே  ....
உங்களுக்கு ஆப்பு ..........

Saturday, January 9, 2016

எனது புது collections  BREAKING NEWS  ரொம்ப நன்னா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க ..

Friday, January 8, 2016

திருமணமான ஒரு ஆணின்அன்பு இரு பெண்களிடம் இருக்கும்..!ஒன்று பெற்ற தாய்...! மற்றது கட்டியமனைவி..! ஆனால், திருமணமானஒரு பெண்ணின்அன்பு முழுவதும் ஒரு ஆணின்மீது மட்டுமே இருக்கும்..! அது அவளைக்கரம் பிடித்த கணவனிடம் மட்டுமே..!கணவனுடன் கானகம் சென்ற சீதையும்காதலனுக்காக காத்திருந்த தமயந்தியும்கதைகளில் கண்ட நிஜங்கள்..!சில சமயம் ஒரு தாயின் அன்பையும்கடந்து விடுகிறாள் ஒரு தாரம்..!பல சமயம்ஒரு தாயாகவே மாறி விடுகிறாள்..!மனைவியின்அன்பை மிஞ்சியது எதுவும் இல்லை.....



Effort makes perfect


உமா  உமா

Monday, January 4, 2016

எனது மதம் :
1.எனது சமயம் தோற்றுவிக்கப்பட்டதல்ல..
மனிதன் இயற்கையை அறிவால் அறிந்த போது,அவனால் உணரப்பட்ட ஒன்று..

2. தன்னை உணர்ந்தவர்கள் அளித்த அனைத்தும் எனக்கு வேதமே..வேத வியாசர் அருளிய நான்மறை தொடங்கி வள்ளலார் அளித்த திருவருட்பா வரை அனைத்துமே எனக்கு வேதம்.

3. இறைவனை வணங்கியே தீர வேண்டும் என்ற அடிமை முறை என் சமயத்தில் இல்லை.தலைவனை மனத்தால் நினைந்தாலே போதும்.எனக்கு இறைவனை குருவாக பூஜிக்கவும் உரிமை உண்டு.அவனையே,தந்தையாக,தாயாக,உற்ற தோழனாக
பாவிக்கவும் உரிமையுண்டு. இந்த இடத்தில்,இன்ன நேரத்தில்,இந்த முறைப்படிதான் வழிபட வேண்டும் என்று என்னை எனது சமயம் கட்டுப்படுத்தவில்லை.

4.எனது கடமைகள்:
அறம் செய்வது
பொருள் ஈட்டுவது
இன்பம் துய்ப்பது

இவை எல்லாவற்றக்கும் மேலாக,
வீடுபேறு (முக்தி அல்லது பிறவா பேறு)அடைவது.

குறிப்பு: அப்பாவி மனிதனுக்கு,ஆசை காட்டி நயவஞ்சமாக மதம் மாற்றினால் சொர்க்கம் கிட்டும் என எனது சமயத்தில் எவனும் கூறவில்லை.

துவைதம்,அத்வைதம் எனும் இரு கோட்பாடுகளிலேயே உலகிலுள்ள அனைத்து மார்க்கங்களும் எனது சமயத்தில் அடங்கி விடுகின்றன.
நான் எனது மற்ற கோட்பாடுகளையும்,
தாத்பரியங்களையும் கூட இங்கு குறிப்பிடவில்லை.

சைவம்,
சித்தாந்தம்,
வேதாந்தம் எனும் இம்மூன்று தத்துவங்கள் எனது சமயம் தவிர வேறெங்கும் இல்லை.

எனது சமயத்தை பின்பற்றுபவன்
சனாதன தருமன் என்றழைக்கப்படுவான்.
அதனுள்ளும் சிறந்தவன்
கர்மயோகி என பெயர்பெறுவான்.

நான் இந்து சமயன் என்றழைக்கப்படவே விரும்புகிறேன்.
ஏனெனில்,
இந்து சமயம் என்பது,

சைவம்-சிவன்,
வைணவம்-திருமால்,
சாக்தம்-சக்தி,
காணாபத்யம்-விநாயகன்,
கௌமாரம்-முருகன்,
சௌரம்-சூரியன்

எனும் அறுபெரும் சமயங்களின் கூட்டுஉருவாக்கம்.

பேரண்டத்திலுள்ள அனைத்து மார்க்கங்களின் சங்கமம்.

வான,கணித,மருத்துவ, அறிவியல் மற்றும் மெய்ஞாண சாத்திரங்களின் ஆதாரம்.