Thursday, July 14, 2016

உலகமென்னும் நந்தவனத்தில்......!!!

வந்து பிறந்த நாம்.........!!!

பெயரைக்கொண்டு அடையாளம் காட்டுவதற்கு வரவில்லை......!!!

உடமைகளைக் கொண்டு பெருமை கொள்வதற்கு வரவில்லை......!!!

ஒரு வியாபாரம் செய்து லாபம் கொள்வதற்கு வரவில்லை.........!!!

படித்ததை பிறர் போற்றும்படி பறைசாற்றி புகழ் தேடி வீழ்வதற்கு வரவில்லை.....!!!

உரிமை கொண்டாடி சறுக்கி விழ வரவில்லை.....!!!

அதிகாரம் செலுத்தும் பொறுப்பாளராக பதிவி ஏற்று பறிபோகுமோ என்ற பயந்து வாழ வரவில்லை......!!!

எனதுகள் என்ற பொறுப்புகளை தூரத்துறத்தி...........

பெயரைவிட தன்மையே உண்மை என்ற பக்குவத்தை கண்டுணர்ந்து ......!!!

படித்துப் பெறும் பட்டங்களை விட பண்பே சிறந்தது என்ற நிலையை உணர்ந்து.......!!!

பணத்தைக் கட்டிக் காக்கும் பூதமல்ல,
பகிர்ந்து கொடுக்கும் அறமே சிறப்பாகும் என்ற தெளிவை உணர்ந்து.....!!!

சமுதாயம் என்னும் சக்கரத்தின் அச்சாணியாக இருந்து.......!!!

வாழ்க்கையை சுழல்வதற்கு உற்ற துணையாக இருக்கத்தான் வந்து பிறந்திருக்கிறோமே தவிர.......!!!

சமுதாயத்தால் திணிக்கப்பட்ட கருத்துக்களுக்கும் துணை புரிய வரவில்லை......!!!

சரி இதையெல்லாம் எங்கிருந்து கற்றுக் கொள்ளவது......???

எந்த புத்தகத்தில் பயில்வது......????

எங்கு கிடைக்கும்........??? என்று கேட்டால்.........

"நான்" என்னும் புத்தகம் நம்மிடமே உள்ளது.....!!!

நம் அனுபவமே சிறந்த ஆசான்.....!!!

நம் மனமே சிறந்த பாடசாலை.....!!!

நம்மிடமே உள்ளது.....!!!

கிடைப்பதல்ல, உணர்ந்து தெளிவது......!!!

ஒவ்வொரு நாளும் மனமென்னும் புத்தகத்தைப் படித்து நான் என்ற தத்துவத்தை உணர்ந்து கொண்டால் இந்தப் படிப்பே நம்மை உயர்த்தும் வான் அளவிற்கு........!!!

"தன்னை அறிய தனக்கொரு கேடில்லை.......!!!

தனக்கே கேடு இல்லை என்றபோது.......

சமுதாயத்திற்கு நம்மால் எதுவும் பாத்திப்பு வருமா......???

ஏனெனில், ஒவ்வொரு தனி மனிதனும் ஒன்றாக இணைத்த கூட்டு கலவை தானே சமுதாயம் என்னும் சாகரம்.......!!!"

"சிந்தனை செய் மனமே"

No comments:

Post a Comment